Dienstag, Oktober 21, 2003

31.10.2003 இன்று எமது அன்பு அன்னை
திருமதி. பொன்னையா இராசம்மா அவர்களின்
முதலாவது நினைவு தினமாகும்.
பலநாள் மனதில் நின்றகேள்வி இன்று அவர்தம்
அஞ்சலிக் கவிதையாகிறது.



நின் தேகச்சூடு
எம்மீது தணியாது
காலநதி நீளம்
காத்த கவின்பேடே

நீர் கொள்ள(ப்) போனாலும்
யாவர்க்கும் நின்று
ஓராறுதரம் சொன்ன
நிழற் தருவே

நான் பொருள்தேடும்
உலகோடு தடுமாறி
ஓய்ந்துன் மடிதேடி
வருகையிலே
மலர்ந்து
" வாடா " வென்றேனும்
இனிதாக ஓர் வார்த்தை
கூறாமல்
பறந்ததும் ஏன் கூறு ?